வடமாகாண சுகாதார அமைச்சின் அலுவலத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
சமூக மட்டத்தில் கொரோனா பரம்பல் இருக்கின்றதா என்பதை உறுதிப்படுத்துவதற்காக கெரோனா தெற்றுக்கான பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொண்டுவந்தோம். இதன் அடிப்படையில் அரியாலை ஆராதனையில் கலந்துகொண்ட 346 பேரை அடையாளம் கண்டுள்ளோம் அவர்கள் அனைவருக்குமான பரிசோதனைகள் முடிவடைந்துள்ளன.
அதில் 20 பேரை காங்கேசன்துறை தனிமைப்படுத்தல் மையத்தில் அனுமதித்திருந்தோம் அவர்களில் 16 பேருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய 04 பேருக்கு மூன்றாவது தடவையாக பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது.
இவர்களுடன் இவர்களுக்கு உணவு பரிமாறிய நான்கு இராணுவத்தினருக்கும் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை விட யாழ்.மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் 26 பேருக்கு இரண்டு தடவைகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களுக்கு தெற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் 23 பேருக்கு பரிசோதனைக்கான மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது அத்துடன் ஆராதனையில் கலந்துகொண்ட அத்தனைபேருக்கும் சோதனைகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்டத்தில் முதலாவது தொற்றாளரான தாவடியைச் சேர்ந்த நபருக்கும் அவருடன் நெருங்கிய தொடர்புடைய மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 18 பேருக்கும் இரண்டு தடவைகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கு தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டள்ளது.
அடுத்த கட்டமாக வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்களுக்கு பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளது. அது மட்டுமன்றி கொழும்பு மாவட்டத்தில் இருந்து அத்தியாவசிய தேவைகள் ஏனைய தேவைகளுக்கா பாரவூர்திகள் சாரதிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் ஒவ்வொரு மாட்டங்களிலும் பரிசோதனைகள் செய்யப்படவுள்ளது.
இதுவரைக்கும் 411 பேருக்கு சமூக மட்டத்தில் பரிசோதனை மேற்கொண்டுள்ளோம் இவற்றில் 11 பேருக்கு மட்டுமே வைரஸ் தொற்றுள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது ஏனையவர்களுக்கு இல்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
Post a Comment