பலாலியில் எஞ்சியுள்ளவர்களுக்கு மூன்றாம் கட்ட பரிசோதனை - அதுவரை தனிமைப்படுத்தல் தொடரும் - Yarl Voice பலாலியில் எஞ்சியுள்ளவர்களுக்கு மூன்றாம் கட்ட பரிசோதனை - அதுவரை தனிமைப்படுத்தல் தொடரும் - Yarl Voice

பலாலியில் எஞ்சியுள்ளவர்களுக்கு மூன்றாம் கட்ட பரிசோதனை - அதுவரை தனிமைப்படுத்தல் தொடரும்

யாழ்ப்பாணம் பலாலி தனிமைப்படுத்தல் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனையவர்களுக்கு மூன்றாம் கட்டப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட இருப்பதாக வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ் அரியாலையில் இடம்பெற்ற சுவிஸ் போதகரின் ஆராதனையில் பங்கு கொண்ட மற்றும் குறித்த போதகருடன் நேரடி தொடர்பு கொண்ட 20 பேர் பலாலி தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களுக்கு முதற்கட்டமாக மேற்கொள்ளப்பட்ட பரிாசதனையில் 6 பேருக்கு கொரோனோ தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந் நிலையில் ஏனைய 14 பேருக்கும் நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 8 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆகையினால் தற்பொது உள்ள 6 பேரும் தொடர்ந்தும் 21 நாட்கள் தனிமைப்படுத்தப்பட உள்ளனர். அத்தோடு அவர்களுக்கு மூன்றாம் கட்ட பரிசோதனையும் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post