யாழ்ப்பாணம் அளவெட்டி அருணோதயாக் கல்லுாரியின் பழைய மாணவர்களின் கனடாக் கிளையினால் 300 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
ஊரடங்கு நடைமுறையால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 300 குடும்பங்களுக்கு மேற்படி கல்லுாரியின் பழைய மாணவர்களின் நிதி உதவியில் இந்த உதவிப் பொருட்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.
இந்த உதவிப் பொருட்களை கல்லுாரியின் பழைய மாணவர் சார்பில் தெல்லிப்பழை பிரதேச செயலகத்தைச் சேர்ந்த கிராம அலுவலர் மற்றும் சமுர்த்தி அலுவலர் ஆகியொர் இணைந்து அளவெட்டி அழகொல்லை விநாயகர் ஆலய மன்னறலில் வைத்து வழங்கி வைத்தனர்.
Post a Comment