புதுவருடப் பிறப்பிற்கு பின்னர் தெரிவு செய்யப்பட்ட 12 மாவட்டங்களில் ஊரடங்கு சட்டத்தை நீக்க அரசாங்கம் ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி அம்பாந்தோட்டை நுவரெலியா மாத்தளை அம்பாறை திருகோணமலை மொனராகலை அனுராதபுரம் வவுனியா பொலன்னறுவை முல்லைத்தீவுஇமன்னார் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இவ்வாறு ஊரடங்கு நீக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி மாவட்டங்களில் கொரோனா வைரஸ் நோயாளர்கள் கண்டுபிடிக்கப்படாமையே இதற்கு காரணம் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.
இதேவேளைஇ கொழும்பு மாவட்டத்தில் உள்ள பாதுக்க சீதாவக்க மற்றும் கம்பஹா மாவட்டத்தில் பியகம ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும் ஊரடங்கு சட்டம் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment