கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் சமூக மறுவாழ்வு அமைப்பு மற்றும் சிற்றி லயன்ஸ் கழகத்தின் ஊடாக இந்த உதவிப் பொருட்களை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
பச்சிலைப்பள்ளி பிரதேசத்தின் மல்வில் பகுதியில் வசிக்கு பெண் தலைமைத்துவ குடும்பங்கள் 45 பேருக்கு தலா இரண்டாயிரம் ருபா பெறுமதியான உவர் உணவுப் பொருட்கள் இதன் போது வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்த உதவித் திட்டத்தை வழங்கிய கோமதி அம்மாள் ராஜேந்திரம் சதீஷ்ரூபன் சசிரேகா ஆகியோருக்கும் யாழ் சிற்றி லயன்ஸ் கழகத்தின் உறுப்பினர்கள் தீவக லயன்ஸ் கழகத்தின் உறுப்பினர்கள் ஆகியோருக்கும் பிரதேச சபைத் தவிசாளர் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
இதே போன்று மேற்படி அமைப்பினால் யாழ் மாவட்டம் கிளிநொச்சி மாவட்டம் என பல இடங்களிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment