கடந்த ஒருவாரமாக ஒருவருக்கும் கொரோனோ தொற்று இல்லை - பரிசோதனைகள் உறுதிப்படுத்தியது - Yarl Voice கடந்த ஒருவாரமாக ஒருவருக்கும் கொரோனோ தொற்று இல்லை - பரிசோதனைகள் உறுதிப்படுத்தியது - Yarl Voice

கடந்த ஒருவாரமாக ஒருவருக்கும் கொரோனோ தொற்று இல்லை - பரிசோதனைகள் உறுதிப்படுத்தியது

கடந்த ஒரு வாரமாக இப் பகுதியில் ஒருவரும் கொரோனோ தொற்றில் அடையாளப்படுத்தப்படவில்லை என யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலையில் சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பலருக்கும் கொரோனோ தொற்று பரிசொதனை மேற்கொள்ளப்பட்டது

இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எவருக்கு கொரோனோ தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை. ஆக கடந்த ஒரு வாரத்தில் யாழ்ப்பாணத்தில் கொரோனோ தொற்று அடையாளம் காணப்படவில்லை.

அதே நேரம் கொரோனோ சந்தேகத்தில் தற்போதும் 4 பேர் வைத்திய சாலையில் அனுமுதிக்கப்பட்டள்ளதாகவும் பணிப்பாளர் சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post