யாழ் போதனாவில் 47 பேருக்கான பரிசோதனையில் ஒருவருக்கும் தொற்றில்லை - பணிப்பாளர் - Yarl Voice யாழ் போதனாவில் 47 பேருக்கான பரிசோதனையில் ஒருவருக்கும் தொற்றில்லை - பணிப்பாளர் - Yarl Voice

யாழ் போதனாவில் 47 பேருக்கான பரிசோதனையில் ஒருவருக்கும் தொற்றில்லை - பணிப்பாளர்

யாழில் 47 பேருக்கு இன்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தில் அதில் ஒருவருக்கும் தொற்று இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இன்று 47 பேருக்கான covid - 19  பரிசோதனை யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டது. இன்றைய பரிசோதனையில் ஒருவருக்கும்  கொரோனா  தொற்று இல்லையென  உறுதி செய்யப்பட்டது.

பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள்:

போதனா வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்டவர்கள்  - 3  பேர்.

போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு - 4 பேர்.

காங்கேசன்துறை கடற்படை வைத்தியசாலை - ஒருவர்

பொது வைத்தியசாலை கிளிநொச்சி  - ஒருவர்.

பொது வைத்தியசாலை வவுனியா - 8 பேர்.

முழங்காவில்  தனிமைப்படுத்தல் நிலையம் -  30 பேர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post