யாழில் இறுக்கமாக்கப்படும் நடவடிக்கைகள் - அரச அதிபர் தெரிவிப்பு - Yarl Voice யாழில் இறுக்கமாக்கப்படும் நடவடிக்கைகள் - அரச அதிபர் தெரிவிப்பு - Yarl Voice

யாழில் இறுக்கமாக்கப்படும் நடவடிக்கைகள் - அரச அதிபர் தெரிவிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் சமூகத்தொற்று ஏற்படாவண்ணம் சில நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்ற வேண்டியது அவசியமாக உள்ளது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் யாழ் வணிகர் கழதினருக்கும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபருக்கும் இடையில் பொதுப் போக்குவரத்து மற்றும் வெளி மாவட்டங்களுக்கு சென்று வருபவர்கள் எதிர்நோக்கும் பாஸ் நடைமுறை தொடர்பாக ஆராயும்கூட்டம் இடம்பெற்றது.

கூட்டத்தின் முடிவில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

எனினும் எதிர்காலத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் சமூகத்தொற்று ஏற்படாத வண்ணம் சில நடைமுறைகளை பின்பற்ற உத்தேசித்துள்ளோம் எனவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.




0/Post a Comment/Comments

Previous Post Next Post