ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க கட்சி உறுப்பினர்களுடன் ஸ்கைப்பில் இன்று கலந்துரையாடல் நடாத்தியுள்ளார்.
பாராளுமனற்த்தைக் கூட்ட வேண்டுமென எதிரக்கட்சிகள் பலவும் வலியுறுத்தி வருகின்ற நிலையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பொன்றுக்காக பிரதமர் மகிந்த ராஐபக்ச அழைத்துள்ளார்.
அலரிமாளிகையில் நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ள இக் கலந்துரையாடலிற்கு ஐக்கிய தேசயக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வுள்ள நிலையிலையே கட்சி உறுப்பினர்களுடன் ஸ்கைப் மூலம் அவசர கலந்துரையாடலொன்றை பிரதமர் நடாத்தியுள்ளார்.
இக் கலந்துரையாடலில் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விஐயகலா மகேஸ்வரனும் இணைந்து கொண்டு கலந்துரையாடலை நடாத்தியுள்ளார்.
Post a Comment