கணவன் மனைவி சண்டையில் விலக்கு பிடிக்கச் சென்ற மைத்துணிக்கு கத்துக்குத்து - கொடிகாமத்தில் சம்பவம் - Yarl Voice கணவன் மனைவி சண்டையில் விலக்கு பிடிக்கச் சென்ற மைத்துணிக்கு கத்துக்குத்து - கொடிகாமத்தில் சம்பவம் - Yarl Voice

கணவன் மனைவி சண்டையில் விலக்கு பிடிக்கச் சென்ற மைத்துணிக்கு கத்துக்குத்து - கொடிகாமத்தில் சம்பவம்

கொடிகாமம் பகுதியில் கணவன் - மனைவியின் தகராற்றினை விலக்க முற்பட்ட மனைவியின் தங்கையை கணவன் வெட்டிப் படுகாயப்படுத்தியுள்ளார்.
[ads id="ads1"]
கொடிகாமம் வெள்ளாம் பொக்கட்டி என்ற பகுதியில் இன்று மாலை 6.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சில காலமாக பிரிந்துவாழும் கணவன் இன்று மாலை மனைவியை சந்தித்த்து வாக்குவாதப் பட்டிருக்கின்றார். வாக்குவாதம் முற்றிய நிலையில் அதனை அவதானித்த மனைவியின் தங்கை அங்கு சென்று சமரசத்துக்கு முயன்றதாகவும் அதனை அடுத்து கணவன் தான் வைத்திருந்த கத்தியால் குறித்த பெண்ணை சரமாரியாக வெட்டியதாக தமக்கு தகவல் கிடைத்ததாக கொடிகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post