அரசாங்க ஊழியர்கள் தங்களது மே மாதச் சம்பளத்திலும் ஒரு தொகையை வழங்குமாறு ஐனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஐயசுந்தர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் சூழலைக் கருத்திற் கொண்டு அரச ஊழியர்கள் தங்களது மே மாதச் சம்பளத்தில் ஒரு தொகையை அரசாங்கத்திற்கு வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.
ஏற்கனவே அரச ஊழியர்களின் ஒரு மாதச் சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை அரசாங்கத்திற்கு வழங்கியிருந்த நிலையிலையே தற்பொது மே மாதச் சம்பளத்திலும் ஒரு தொகையை வழங்குமாறு கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் தன்னுடைய மே மாதச் சம்பளத்தை கொரோனோ ஒழிப்பிற்காக தான் வழங்கியுள்ளதாகவும் அதே போல அந்த மாதச் சம்பளத்தில் ஒரு தொகையையைாவது அரச ஊழியர்களும் வழங்க வேண்டுமென்று ஐனாதிபதியின் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Post a Comment