கொரோனோ வைரஸ் தொற்றினால் இலங்கையில் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குருநாகலையைச் சேர்ந்த 72 வயதான பெண்ணொருவர் கொரோனாவால் மரணமடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கையில் ஏழு பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ள நிலையில் இன்று மேலும் ஒருவர் உயிரிழந்ததால் இதுவரையில் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 பேராக உயர்வடைந்துள்ளது.
Post a Comment