எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் நாட்டிலுள்ள அனைத்தப் பல்கலைக் கழகங்களைின் நடவடிக்கைகளும் மீள ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பிட்ட சில அதிகாரிகள் பணியாளர்களை வேலைக்கு அமர்த்த பல்கலைக்கழக நிர்வாகங்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்தும் தற்போது பேச்சு நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை பல்கலைக் கழகங்களின் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டாலும் அரச பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்து இன்னும் அரசாங்கம் இறுதி முடிவை எடுக்கவில்லை.
Post a Comment