யாழ்ப்பாணம், செம்மணி பகுதியில் பொலிஸாரின் தடையையும் மீறி வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
[ads id="ads1"]
வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிடவர்கள், முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் நடைபெறவிருந்த முள்ளிவாய்க்கால் படுகொலையின் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக, யாழ்ப்பாணத்திலிருந்து இருந்து இன்று காலை முல்லைத்தீவு செல்வதற்காக யாழ்.மன்னார் வீதியூடாக பயணித்த போது , சங்குப்பிட்டி பாலத்திற்கு சற்று தொலைவில் உள்ள கேரதீவு இராணுவ சோதனை சாவடியில் வழிமறிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.
அந்நிலையில் அவர்கள் யாழ்ப்பாணம் திரும்பி யாழ்.செம்மணி பகுதியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்த முற்பட்ட போது , அங்கு வந்த யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோ தலைமையிலான குழுவினர், நீதிமன்ற தடையுத்தரவு உள்ளதாக கூறி நிகழ்வினை தடை செய்தனர்.
அதன் போது , நீதிமன்ற உத்தரவை மதித்து நிகழ்வை நடத்தவில்லை எனத் தெரிவித்து விக்னேஸ்வரன், அங்கிருந்து புறப்பட்டார்.
[ads id="ads2"]
அவர் புறப்பட்டு ஒரு சில நிமிடத்தில் வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் , க.அருந்தவபாலன் உள்ளிட்ட குழுவினர் பொலிஸாரின் தடையையும் மீறி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
Post a Comment