பாராளுமன்றத் தேர்தலில் முன்னணிக்கு ஆதரவு வழங்குவதாக ஐந்து அமைப்புக்கள் கூட்டாக அறிவிப்பு - Yarl Voice பாராளுமன்றத் தேர்தலில் முன்னணிக்கு ஆதரவு வழங்குவதாக ஐந்து அமைப்புக்கள் கூட்டாக அறிவிப்பு - Yarl Voice

பாராளுமன்றத் தேர்தலில் முன்னணிக்கு ஆதரவு வழங்குவதாக ஐந்து அமைப்புக்கள் கூட்டாக அறிவிப்பு

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு வடக்கு மாகாணத்திலுள்ள 5 பொது அமைப்புக்கள் ஆதரவை வழங்குவதாக இன்று அறிவித்துள்ளன.

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களின் நலனுக்காகவே முன்னணியை ஆதரிப்பதாக அந்த அமைப்புக்களின் பிரதிநிதிகள் இன்றைய ஊடக சந்திப்பில் அறிவித்துள்ளன.

யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டிருந்த  கிராமிய உழைப்பாளர் சங்கம் மாவட்ட மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மாவட்ட பூந்தளிர் பெண்கள் அமைப்பு மாற்றத்திற்கான மாவட்ட இளைஞர் பேரவை வடமராட்சி கிழக்கு பிரஜைகள் குமு அகிய அமைப்புக்களே ஆதரவினை தெரிவித்துள்ளனர்.






0/Post a Comment/Comments

Previous Post Next Post