அரச நியமனங்கள் நிராகரிக்கப்பட்ட யாழ் மாவட்ட பட்டதாரிகள் ஆளுநரிடம் விடுத்துள்ள கோரிக்கை - Yarl Voice அரச நியமனங்கள் நிராகரிக்கப்பட்ட யாழ் மாவட்ட பட்டதாரிகள் ஆளுநரிடம் விடுத்துள்ள கோரிக்கை - Yarl Voice

அரச நியமனங்கள் நிராகரிக்கப்பட்ட யாழ் மாவட்ட பட்டதாரிகள் ஆளுநரிடம் விடுத்துள்ள கோரிக்கை

அரசாங்கத்தினால் 50 ஆயிரம்பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு நாடு பூராகவும் வழங்கப்படவுள்ள நிலையில் பட்டதாரிகளுக்கான அரச நியமன கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆயிரத்து 450 க்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கான நியமனங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக பட்டதாரிகளுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

 குறித்த விடயம் தொடர்பில் இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டத்தில் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகள் ஒன்றிணைந்து கலந்துரையாடிய தோடு வடக்கு மாகாண ஆளுநரிடம் தமது நியமனத்தை உறுதிப்படுத்துமாறு கோரி மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்


 குறித்த மகஜரில் நிராகரிக்கப்பட்ட காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ள நுPகுஇநுவுகு பிரச்சனை மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பினை முடித்தவர்களுக்கானபிரச்சனை மற்றும் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் பிரச்சினை போன்ற மூன்று விடயங்களை உள்ளடக்கி   வட மாகாண ஆளுநரிடம் மகஜர் கையளித்துள்ளார்கள்

குறித்த விடயங்கள் தொடர்பில் உரிய தரப்பினருக்கு அதனை தெளிவுபடுத்தி யாழ்ப்பாண மாவட்டத்தில் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கான நியமனத்தை வழங்க ஆவணை செய்யுமாறு கோரி  மகஜரினை கையளித்துள்ளனர்.

 எனினும் ஏற்கனவே அரசாங்கத்தினால் நியமனக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள பட்டதாரிகள் எதிர்வரும் மாதம் 2ஆம் திகதி தமது கடமைகளை ஆரம்பிக்கின்ற நிலைமையில் நிராகரிக்கப்பட்l பட்டதாரிகளுக்கும் எதிர்வரும் 2 ஆம் திகதிக்குள் உரிய தீர்வு பெற்றுத்தர வேண்டும் என பட்டதாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது


0/Post a Comment/Comments

Previous Post Next Post