வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் புதுpய அரசாங்கத்தின் அமைச்சர்கள் நேற்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
இதன் போது மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் தலைவர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். இதற்கமைய அந்த தலைவர்களுடன் இணைத் தலைவராக வடக்கு ஆளுநரும் வட மாகாணத்தில் நியமிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment