முன்னாள் ஐனாதிபதியும சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவிற்கு எந்தவித அமைச்சுப் பதவியும் வழங்கப்படவில்லை.
நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் புதிய அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ:வு இன்று நடைபெற்றது.
இதன் போது 28 அமைச்சர்களும் 40 இராஐhங்க அமைச்சர்களும் ஐனாதிபதி கோட்டாபாய முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.
பொதுஐன பெரமுன கட்சியின் அமைந்திருக்கும் இந்த ஆட்சியின் பங்காளிகளில் ஒன்றான சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
ஆனாலும் அதன் தலைவரும் முன்னாள் ஐனாதிபதியுமுhன மைத்திரிபால சிறிசேனவிற்கு எந்தவொரு அமைச்சுப் பதவியும் வழங்கப்படவில்லை.
ஸமைத்திரிக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படாதமை பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியிருக்கின்ற இந் நேரத்தில் அவருக்கு பாராளுமன்ற சபாநாயகர்டிபதவி வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment