பருத்தித்துறை தும்பளை பகுதியில் அமைந்துள்ள வெளி மாவட்ட மீனவர்களின் 5 வாடிகள் இனந்தெரியாத நபர்களினால் இன்று காலை தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது...
பருத்தித்துறை தும்பளை பகுதியில் அமைந்துள்ள வெளி மாவட்ட மீனவர்களின் வாடித் தொகுதிக்கு இனந்தெரியாத நபர்கள் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.
இதனால் ஐந்து வாடிகள் தீயில் எரிந்து நாசமாகி உள்ளன.இதனால் அப்பகுதியில் உள்ள மீனவர்களுக்கிடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
--
Post a Comment