வேலனையில் காணாமல் போன படகு தீ வைக்கப்பட்ட நிலையில் மீட்பு - Yarl Voice வேலனையில் காணாமல் போன படகு தீ வைக்கப்பட்ட நிலையில் மீட்பு - Yarl Voice

வேலனையில் காணாமல் போன படகு தீ வைக்கப்பட்ட நிலையில் மீட்பு





வேலணை துறைமுகத்தில் கடந்த 3 தினங்களிற்கு முன்பு காணாமல்போன படகு  விசமிகளால் தீயிட்டு கொழுத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

வேலணைப் பகுதியைச் சேர்ந்த மீனவரான  மாணிக்கம் - ரவிசங்கர்   என்பவரின் படகே இவ்வாறு தீயிட்டுக்கொழுத்தப்பட்டுள்ளதாக ஊர்காவல்துறை பொலிசாரிடம் முறையிடப்பட்டுள்ளது.

இவ்வாறு தீயிடப்பட்ட சம்பவம் தொடர்பில் கடற்படையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டதோடு தீயில் எரிந்து கருகிய படகின் பெறுமதி 5 லட்சம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இதேநேரம் படகு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமைநுனால் அதன் இயந்திரத்தினை உரிமையாளர் எடுத்துச் சென்றதனால் இயந்திரம் தப்பியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post