யாழ் மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணணுக்கு எதிரான வழக்கு தொடர்பில் வாபஸ் பெறப்படுமா இல்லையா என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏஇசுமந்திரன் பதிலளித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போது மணிவண்ணணிற்கு எதிரான வழக்கு தொடர்பில் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர சபை உறுப்பினராக இருந்த சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணணிற்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. ஆந்த வழக்கில் மாநாகர சபை அமர்வுகளிற்கு செல்வதற்கு மணிவண்ணணிற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்திருக்கின்றது.
இவ்வாறான நிலையில் முன்னணியிலிருந்து தற்போது மணிவண்ணண் நீக்கப்பட்டுள்ளதாக கட்சித் தலைவர் கNஐந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்துள்ள நிலையில் அவருக்கு எதிரான வழக்கு வாபஸ் பெறப்படுமா என இந்த ஊடக சந்திப்பின் போது கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த சுமந்திரன் இந்த வழக்கின் மனு தாரர் எனக்கு கொடுக்கிற அறிவுறுத்தலின் படி நான் செயற்படுவேன். இதில் நான் சட்டத்தரணி மட்டும் தான் என்று பதலளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment