இந்தியாவின் தூத்துக்குடி கடல் பகுதியில் அனுமதியின்றி சுற்றித்திரிந்த இலங்கை படகினை இந்திய கடலோர காவல் படையினர்சுற்றிவளைத்து சோதனை செய்ததில் பல கோடி கரோயினுடன் ஏழு பேர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த படகில் பல கோடி
ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருளும் ஐந்து துப்பாக்கிகளும் இருந்ததாக இந்தியச் செய்திகள் மூலம் தெரிய வருகிறது.
பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருள் மற்றும் படகு என்பன நாளை காலை தூத்துக்குடி கடலோர காவல் படை முகாமை அடைந்த பின்பே முழுமையான விபரம் அறியக் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment