யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறைப் பகுதியில் கடல் ஆமை ஒன்றை இறைச்சி ஆக்கிய இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இருவரும் ஆமை இறைச்சியுடன் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரும் சான்றுப் பொருட்களுடன் யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
ஒப்படைக்கப்பட்ட இருவரும் யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் தணைக்களம் ஊடாக சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்ப்படவுள்ளனர்.
Post a Comment