வவுனியா பயங்கரவாத விசாரணை பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 16 பேருக்கு கொரோனா - Yarl Voice வவுனியா பயங்கரவாத விசாரணை பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 16 பேருக்கு கொரோனா - Yarl Voice

வவுனியா பயங்கரவாத விசாரணை பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 16 பேருக்கு கொரோனா


வவுனியா பயங்கரவாத விசாரணை பிரிவில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த 16 சந்தேக நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

18 சந்தேகநபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளைஇ பொலன்னறுவை லங்காபுர பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் 38 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த தொழிற்சாலையில் சுமார் 800 பேர் பணி புரிவதாக தெரிவிக்கப்படும் நிலையில் இன்றைய தினம் மேலும் 300 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும்இ தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

0/Post a Comment/Comments

Previous Post Next Post