சரணடைந்த விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர் என்ற அமெரிக்காவின் கருத்தை நிராகரித்தது இலங்கை - Yarl Voice சரணடைந்த விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர் என்ற அமெரிக்காவின் கருத்தை நிராகரித்தது இலங்கை - Yarl Voice

சரணடைந்த விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர் என்ற அமெரிக்காவின் கருத்தை நிராகரித்தது இலங்கை





யுத்தத்தின் இறுதியில் சரணடைந்த விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என ஜனாதிபதி தெரிவித்தார் என அமெரிக்காவின் யுத்த குற்றவிவகாரங்களுக்கான முன்னாள் தூதுவர் ஸ்டீபன் ரப் தெரிவித்துள்ளதை ஜனாதிபதி அலுவலகம் நிராகரித்துள்ளது.

அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் தெரிவித்துள்ளமை குறித்து ஜனாதிபதியின் விளக்கத்தினை பெறமுயன்றவேளை ரப் தெரிவித்துள்ளமைக்கு எந்த ஆதாரமும் இல்லை என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்தது என ஐலண்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

யுத்தகுற்ற விவகாரங்களிற்கான அலுவலகத்திலிருந்து ஓய்வுபெற்று ஏழு வருடங்களின் பின்னர் ஸ்டீபன் ரப் அவ்வாறான குற்றச்சாட்டை முன்வைப்பதற்கான நோக்கம் என்னவெனவும் ஜனாதிபதி அலுவலகம் கேள்வி எழுப்பியுள்ளது.

ரப் 2012 2015 இல் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டார் என்பதை சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி அலுவலகம் ஜெனீவா அமர்வினை அடிப்படையாக வைத்N தரப் இந்த  அதிர்ச்சிதரும் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார் என குறிப்பிட்டுள்ளது.

இலங்கைக்கு களங்கம் ஏற்படுத்தும் ஒட்டுமொத்த முயற்சியின் ஒரு பகுதியே இது என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது என ஐலண்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

மோதல்களங்களில் கொலைகள் இடம்பெறவில்லை என அமெரி;க்க தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரியாக விளங்கிய லோரன்ஸ் ஸ்மித் என்பவர் தெரிவித்தார் எனவும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

ரப் தனது பதவிக்காலத்தில் இலங்கை ஜனாதிபதி அவ்வாறு தெரிவித்தார் என குறிப்பிட்டாரா 2015 ஜெனீவா அமர்விற்கு முன்னதாக ரப் இந்த விடயத்தினை ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவுடன் பகிர்ந்துகொண்டாரா என்பது குறித்து யுத்தகுற்றங்களிற்கான மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிக்கான அலுவலகம் தெளிவுபடுத்தவேண்டும் எனவும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் 12000 விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களிற்கு புனர்வாழ்வு அளித்தது என தெரிவித்துள்ள  ஜனாதிபதி அலுவலகம் இவர்களில் பலர் வெளிநாடுகளில் வேறுபெயர்களில் வாழ்கின்றனர் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வைத்திருக்கின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post