யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர் நலன்புரிச் சங்கத்தின் 40 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்வு இன்று 19 ஆம் திகதி வெள்ளிக் கிழமை, காலை 10 மணிக்கு, பல்கலைக்கழக நலன்புரிக் கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.
பல்கலைக்கழக மாணவர்கள், பணியாளர்கள் உட்பட 110 பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.
Post a Comment