நல்லிணக்கத்தினை வலியுறுத்தி யாழ் சிவில் சமூக நிலையத்தின் ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்ட சமாதானத்துக்கான பேரணி இன்று யாழ்ப்பாணத்தில் நிறைவுபெற்றது.
சில தினங்களுக்கு முன் தேவேந்திரமுனையில் ஆரம்பிக்கப்பட்ட இப்பேரணி நேற்றைய தினம் அனுராதபுரத்தை வந்தடைந்தது இன்று மதியம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த பேரணி யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பஸ்றியன் சந்தியில் ஆரம்பித்து ஏ 9 வீதியூடாக யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தை அடைந்தது.
நாட்டில் மூவினங்களுக்கும் இடையே சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் யாழ் சிவில் சமூக அமைப்பினால் இப்பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment