யாழ்ப்பாணம் - புத்தூர் வீரவாணி வாதரவத்தை பகுதியில் தனிமையில் வசித்த ஆண் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் உயிரிழந்தவர் 52 வயதுடைய 7 பிள்ளைகளின் தந்தையான துரைராஜா சந்திரகுமார் என மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் 4 சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment