இலங்கையில் ஒரே நாளில் உச்சம் தொட்ட கொரோனா - 1096 பேருக்கு தொற்று- - Yarl Voice இலங்கையில் ஒரே நாளில் உச்சம் தொட்ட கொரோனா - 1096 பேருக்கு தொற்று- - Yarl Voice

இலங்கையில் ஒரே நாளில் உச்சம் தொட்ட கொரோனா - 1096 பேருக்கு தொற்று-




இலங்கையில் 1096 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முதன் முறையாக ஒரே நாளில் ஆயிரம் தொற்றாளர்களை கடந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

அதனடிப்படையில் இலங்கையில் இதுவரை 103,472 பேருக்கு இதுவரையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 276 பேர் நேற்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனால் நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 94,856 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை இலங்கையில் 647 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post