யாழில் கொவிட் நிவாரண நிதியாக 15. 23 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது -அரச அதிபர் மகேசன் தெரிவிப்பு - Yarl Voice யாழில் கொவிட் நிவாரண நிதியாக 15. 23 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது -அரச அதிபர் மகேசன் தெரிவிப்பு - Yarl Voice

யாழில் கொவிட் நிவாரண நிதியாக 15. 23 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது -அரச அதிபர் மகேசன் தெரிவிப்பு



யாழில் 2021 காலப்பகுதியில் கொவிட்19 தனிமைப்படுத்தல் நிவாரண நிதியாக 15.23 மில்லியன் ரூபாய்கள் வழங்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ் மாவட்டத்தில் ஏப்ரல் இம்மாதம் வரை 1784 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 600 பேர் தொடர்ந்தும் சுய தனிமை படுத் த பட்டுள்ளதுடன் 500 பேர் பூரண சுகமடைந்து வீடுகளுக்கு சென்று உள்ளனர்.

மேலும் கொவிட் தொற்றினால் சுய தனிமைப்படுத்தப்பட்ட 490 குடும்பங்களுக்கு வழங்குவதற்காக 4.9மில்லியன் ரூபாய்கள் கிடைக்கப் பெற்றள்ள நிலையில் அவர்களுக்கும் அதனை வழங்குவதற்கு உரிய ஏற்பாடுகளை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post