அரசியல் யாப்பில் சைவசமயத்திற்கு முன்னுரிமை வழங்க கோரி உணவுதவிர்ப்பு போராட்டம் - Yarl Voice அரசியல் யாப்பில் சைவசமயத்திற்கு முன்னுரிமை வழங்க கோரி உணவுதவிர்ப்பு போராட்டம் - Yarl Voice

அரசியல் யாப்பில் சைவசமயத்திற்கு முன்னுரிமை வழங்க கோரி உணவுதவிர்ப்பு போராட்டம்




புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியல் யாப்பில் சைவ சமயத்திற்கு முன்னுரிமை வழங்கக் கோரி இலங்கையின் 11 மாவட்டங்களில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை உணவு தவிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி மறவன்புலவில் உணவு தவிர்ப்பு ஈடுபடும் மறவன்புலவு க.சச்சிதானந்தம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்....


சைவ சமயத்திற்கு முன்னுரிமை வழங்கப் பட்டால் மத மாற்றிகள் மூலம் சைவ சமயத்திலிருந்து வேறு மதத்திற்கு மக்கள் செல்லமாட்டார்கள் அத்தோடு சைவத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டால் பௌத்த மதமும் இந்து மதமும் பாதுகாக்கப்படும் இல்லாவிட்டால் இரண்டு மதங்களும் மதமாற்றிகளால், 

குறிப்பாக கிழக்கு இலங்கையில் மதமாற்றிகளின்  செயற்பாடு அதிகரித்து காணப்படுகின்றது அதேபோல் இந்து மக்கள் பசுவினை கோமாதா என  வணங்குகின்றோம். ஆனால் இங்கே மாடுகளை வெட்டி உண்கிறார்கள் அதனையும் நிறுத்த கோருகின்றோம் அதாவது பாலைவனங்களில் தான் மாடுகளை அறுத்து உண்பார்கள் ஆனால் இலங்கை ஒரு சோலைவனம் இங்கே மாடுகளை கோமாதாவாகவணங்கி அவைகளைப் பாதுகாக்க வேண்டும் எனவே இலங்கையில் மாடுகள் வெட்டுவதை நிறுத்த வேண்டுமெனவும் கோரி இன்றைய தினம் உணவு தவிப்பில் ஈடுபட்டுவருகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post