ரஞ்சன் ராமநாயக்கவிற்கு நீதி நிலைநாட்டப்படுவதை உறுதிசெய்வேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவை சிறையில் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பிற்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினருக்கு நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்வேன் என அவர் தெரிவித்துள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலையை நோக்கி ஜனநாயக ரீதியிலும் அரசமைப்பு ரீதியிலும் சட்டபூர்வமாகவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் அவருக்கு நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்வதற்காக பாடுபடுவேன் என அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment