கொத்மலை வெதமுல்ல தோட்டத்தின் கெமினிதென்ன பிரிவில் நேற்றிரவு மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையில் வாய்தர்க்கம் ஏற்பட்டு முற்றியதில் மாமனார் பொல்லால் தாக்கியதில் மருமகன் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார்.
கொத்மலை வெதமுல்ல தோட்டத்தின் கெமினிதென்ன பிரிவில் வசித்த கணேசன் விஜயகுமார்(வயது-35) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் தாக்குதலை நடத்திய மாமனார் கொத்மலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Post a Comment