கர்தினால் மல்கம் ரஞ்சித் இரட்டை முகவராகிவிட்டார் என பொதுபல சேனாவின் ஞானசார தேரர்தெரிவித்துள்ளார்.
மல்கம்ரஞ்சித் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்த கருத்துக்களை அடிப்படையாக வைத்தே இந்த கருத்தினை ஞானசாரதேரர் வெளியிட்டுள்ளார்.
நாட்டில் காணப்படும் மத தீவிரவாதத்திற்கு ஆதரவளிப்பதன் மூலம் கர்தினால் இரட்டை முகவராக மாறியுள்ளார் என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கர்தினாலை இரட்டை முகவராக மாறவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்வரை மல்கம் ரஞ்சித் பொறுமையாகயிருக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மததீவிரவாதத்தை தோற்கடிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள ஞானசாரதேரர் கர்தினாலுக்கு ஜனாதிபதி அல்லது பிரதமருடன் பிரச்சினை ஏதாவது இருந்தால் அவர் அது குறித்து தனிப்பட்ட முறையில் அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவேண்டும் நாட்டில் அதிகரித்துவரும் மததீவிரவாதத்திற்கு ஆதரவளிக்ககூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் நாங்கள் மனிதகுலம் குறித்தே சிந்திக்கின்றோம்,அவர்களுடைய மதம் மற்றும் மொழி குறித்து சிந்திக்கவில்லைஎன தெரிவித்துள்ள ஞானசார தேரர் இஸ்லாம் என்றபெயரில் மனித குலத்திற்கு எதிராக வரும் தீவிரவாதத்தை தோற்கடிப்பதற்காக போராடுகின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கர்தினால் எங்களின் முயற்சிகளிற்கு ஆதரவளிக்கவேண்டும் எனவும் ஞானசார தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Post a Comment