ஒட்டங்கேணி பாலாவித்தாழ் இந்து, கிறிஸ்தவ மயானம், ஒட்டங்கேணி சனசமூக நிலைய மக்கள் இளைஞர்கள் இணைந்து சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பகுதி விவசாய நிலம், கடந்த யுத்தம் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து வேறு இடங்களில் வாழ்ந்து வரும் நிலையில், விவசாய நிலங்கள் பற்றைக் காடாகி காணப்படுகிறது.
ஒட்டங்கேணி மயானம் இவ் வீதி வழியாகவே செல்ல வேண்டியிருப்பதால் பெரும் சிறமங்களின் மத்தியிலேயே சடலம் கொண்டு செல்லப்படுவதாக இம் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனை சீர் செய்து தருமாறு அரசியல் வாதிகள், பிரதேச சபையினரைக் கோரிய போதும் இவ் வீதி கண்டு கொள்ளப்படவில்லையென மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
Post a Comment