யாழ்ப்பாணத்திலிருந்து செயற்படும் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றின் ஊழியர்கள் 14 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் குறித்த தொலைக்காட்சியின் நிகழ்ச்சிப் பிரிவைச் சேர்ந்த இரு ஊழியர்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த தொலைக்காட்சி ஊழியர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
குறித்த முடிவுகளின் படி இன்று வரை ஊழியர்கள் 15 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Post a Comment