யாழில் 26 நாள் குழந்தை மற்றும் தாய்க்கு கொரோனா - Yarl Voice யாழில் 26 நாள் குழந்தை மற்றும் தாய்க்கு கொரோனா - Yarl Voice

யாழில் 26 நாள் குழந்தை மற்றும் தாய்க்கு கொரோனா



யாழ்ப்பாணத்தில் பிறந்து 26 நாட்களேயான குழந்தைக்கும் தாய்க்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று நோய் அறிகுறிகளுடன் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் குழ்தையும் தாயும் அனுமதிக்கப்பட்டனர்.  

முன்னதாக குழந்தையின் தாய்க்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதன் பின்னர் குழந்தைக்கு நேற்று முன்தினம் இரவு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து தாயும் சேயும் கொரோனா சிகிச்சை விடுதியில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post