யாழ்ப்பாணம் கொடிகாமத்தில் தொடர்ந்தும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சில பகுதிகள் இன்று இரவு முதல் முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொடிகாமம் சந்தை வியாபாரிகள் சிலருக்கு கொரோனா ஏற்கனவே தொற்று ஏற்பட்டதையடுத்து சந்தை வியாபாரிகள் மற்றும் நகர வர்த்தர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 21 பேருக்கு இன்றைய தினம் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய நிலையில் கொடிகாமம் மத்தி கொடிகாமம் வடக்கு என கொடிகாமத்தில் இரண்டு கிராம சேவகர் பிரிவுகள் இன்று இரவு முதல் தனிமைப்படுத்தல் முடக்கத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
Post a Comment