நல்லூரடியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி வெளியேறிய இளைஞர்கள் விளக்கமறியலில் - Yarl Voice நல்லூரடியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி வெளியேறிய இளைஞர்கள் விளக்கமறியலில் - Yarl Voice

நல்லூரடியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி வெளியேறிய இளைஞர்கள் விளக்கமறியலில்



யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி பகுதி தனிமைப்படுத்தல் பகுதியிலிருந்து தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி வெளியேறிய 5 இளைஞர்களுக்கு  எதிர்வரும்   7ஆம் திகதி திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க  யாழ்ப்பாணம்  நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பொலிஸார் கண்காணிப்பில் இருக்கும் இடத்தில் நபர்கள்  கழிவுவாய்க்கால் வழியாக திருட்டுத்தனமாக  வெளியேறிய நிலையில் யாழ்ப்பாணம் சிவன் கோயிலடியில் வைத்து இன்று அதிகாலை 4 மணிக்கு பொலிஸாரினால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர். கைது செய்தபோது  மதுபோதையில் இருந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post