யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி பகுதி தனிமைப்படுத்தல் பகுதியிலிருந்து தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி வெளியேறிய 5 இளைஞர்களுக்கு எதிர்வரும் 7ஆம் திகதி திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பொலிஸார் கண்காணிப்பில் இருக்கும் இடத்தில் நபர்கள் கழிவுவாய்க்கால் வழியாக திருட்டுத்தனமாக வெளியேறிய நிலையில் யாழ்ப்பாணம் சிவன் கோயிலடியில் வைத்து இன்று அதிகாலை 4 மணிக்கு பொலிஸாரினால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர். கைது செய்தபோது மதுபோதையில் இருந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Post a Comment