பனை முறிந்து வீட்டின்மேல் வீழ்ந்து பச்சிளம் குழந்தை படுகாயம்! - Yarl Voice பனை முறிந்து வீட்டின்மேல் வீழ்ந்து பச்சிளம் குழந்தை படுகாயம்! - Yarl Voice

பனை முறிந்து வீட்டின்மேல் வீழ்ந்து பச்சிளம் குழந்தை படுகாயம்!



காரைநகர் சிவகாமி அம்மன் கோவில் வீதியில் உள்ள வீட்டின் மேல் பனை முறிந்து விழுந்ததால் இரண்டரை வயதுக் குழந்தை படுகாயமடைந்துள்ளது.

குறித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவத்தில் கிரிபாலன் கஸ்மிலா (வயது 2 1/2) என்ற குழந்தையே இவ்வாறு படுகாயமடைந்துள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
குழந்தை வீட்டினுள் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த வேளை பலத்த காற்று வீசியதன் காரணமாக வீட்டிற்கு அருகே இருந்த பனை ஒன்று அடியோடு பெயர்ந்து வீட்டிற்கு மேல் விழுந்துள்ளது. இதனால் குழந்தை படுகாயமடைந்துள்ளது.

இதனையடுத்து குழந்தை வலந்தலை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து அம்புலன்ஸ் மூலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post