வடக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் வீட்டில் ஆடு திருட்டு - Yarl Voice வடக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் வீட்டில் ஆடு திருட்டு - Yarl Voice

வடக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் வீட்டில் ஆடு திருட்டு



வடக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் த.குருகுலராயாவின் வீட்டிற்குள் இன்று அதிகாலை புகுந்த திருடர்கள் ஆட்டுக் கடாவை களவாடிச் சென்றுள்ளனர்.

கிளிநொச்சியில்  உள்ள அவரது வீட்டு வளவில் இன்று அதிகாலை  கட்டி நின்ற ஆடே திருடர்களால் களவாடப்பட்டுள்ளது.

தற்போதைய சந்தை விலையில் 50 ஆயிரம் ரூபா பெறுமதியிலான ஆடே இவ்வாறு களவாடப்பட்டுள்ளது. 

இன்று அதிகாலை நாய் குரைக்கும் சந்தம் கேட்ட சமயம் மின் விளக்குகளை ஒளிரவிட்ட போதும் ஏதும் கண்டறியப்படவில்லை.

இந்த நிலையில் காலையில் பார்வையிட்ட சமயமே ஆடு களவாடப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post