யாழில் தடுப்பூசி வழங்கும் நிலையங்களை அதிகரியுங்கள் - நார்மல் ராஜபக்ச - Yarl Voice யாழில் தடுப்பூசி வழங்கும் நிலையங்களை அதிகரியுங்கள் - நார்மல் ராஜபக்ச - Yarl Voice

யாழில் தடுப்பூசி வழங்கும் நிலையங்களை அதிகரியுங்கள் - நார்மல் ராஜபக்ச


யாழ் மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச பொதுமக்களுக்கான COVID -19 தடுப்பூசி வழங்கப்படும் நிலையங்களுக்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளார்.

அந்த வகையில் யாழ் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கோவிட் -19 தடுப்பூசி செலுத்தும் நிலையமான அரியாலை பிரப்பன்குளம் மகாமாரியம்மன் திருமண மண்டபத்திற்கும், கைதடி ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தில் தடுப்பூசி வழங்கும் நிலையத்திற்கும் கோப்பாய் ஆதார வைத்தியசாலை தடுப்பூசி வழங்கும் நிலையம், பருத்தித்துறை கரவெட்டி பகுதிகளில் தடுப்பூசி நிலையங்களுக்கும் விஜயத்தினை மேற்கொண்டு தடுப்பூசி வழங்கல் தொடர்பில் சுகாதார பிரிவினருடன் கலந்துரையாடினார்.

தடுப்பூசி நிலையங்களை பார்வையிட்ட பின் 
சுகாதார அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது யாழ்ப்பாணம் மட்டுமல்ல கிளிநொச்சி வவுனியா முல்லைத்தீவு ஆகிய இடங்களிலும் மேற்படி தடுப்பூசி அடுத்த கட்டம் வழங்கப்படவுள்ள தன் காரணமாக முதல் கட்டமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் அரசினால் வழங்கப்பட்ட இந்தத் தடுப்பூசிகளைப் விரைவாக மக்களுக்கு விநியோகிக்கும் செயற்பாட்டினை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார் 

அத்தோடு  இந்த முதல்கட்ட தடுப்பூசியினை விரைவாக வழங்காத விடத்து அடுத்த இரண்டாம் கட்ட தடுப்பூசியினை  பெற்றுக் கொள்வதில் சிரமம்  ஏற்படும் எனவே உடனடியாக தடுப்பூசி வழங்கும் நிலையங்களினை அதிகரித்து மிகக் குறைந்த நாட்களில் இந்த 50,000 தடுப்பூசியினை வழங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் சுகாதார அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார் 

பொலீஸ் ராணுவத்தினரின் உதவியுடன் மேலும் பல தடுப்பூசி வழங்கும் நிலையங்களை விஸ்தரித்து விரைவில் அரசினால் வழங்கப்பட்டுள்ள முதல்கட்ட 50,000 தடுப்பூசிகளை மக்களுக்கு விநியோகிக்க மாறு சுகாதார பிரிவினருக்கு அறிவுறுத்தினார்

அமைச்சரின் விஜயத்தின் போது வடமாகாண ஆளுநர் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மற்றும் சுகாதார உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்

0/Post a Comment/Comments

Previous Post Next Post