யாழில் 12 ஆயிரம் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு இன்று வழங்கப்பட்டுள்ளது - அரச அதிபர் அறிவிப்பு - Yarl Voice யாழில் 12 ஆயிரம் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு இன்று வழங்கப்பட்டுள்ளது - அரச அதிபர் அறிவிப்பு - Yarl Voice

யாழில் 12 ஆயிரம் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு இன்று வழங்கப்பட்டுள்ளது - அரச அதிபர் அறிவிப்பு



யாழ் மாவட்டத்தில் இன்று 12 ஆயிரம் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுளளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.

நாடு பூராகவும் அரசினால் நிதி கொடுப்பனவு வழங்கப்பட்டு வரும் நிலையில் யாழ் மாவட்டத்தில் 15 பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 12 ஆயிரம் குடும்பங்களுக்கு இன்று காலையில் இருந்து  வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த க.மகேசன் தொடர்ச்சியாக ஏனைய  குடும்பங்களுக்கும் குறித்த நிதி வழங்கி வைக்கப்பட உள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ்  மாவட்டத்தில் சுமார் 75 ஆயிரம் குடும்பங்களுக்கு அதாவது சமுர்த்திபெறு குடும்பங்களுக்கும் அத்தோடு வருமானம் குறைந்த 38 ஆயிரம் குடும்பங்கள் உட்பட மொத்தமாக ஒரு லட்சத்து 52 ஆயிரம் குடும்பங்களுக்கு குறித்த 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக க.மகேசன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post