ஜூன் 14ஆம் திகதிக்குப் பின் பயணக் கட்டுப்பாடுகளை நீடிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.
சமூக ஊடகங்களில் பரவும் தவறான செய்திகளுக்குப் பதிலளிக்கும் விதமாக இராணுவத் தளபதி இன்று இதனைத் தெரிவித்தார்.
அதன்படி, நாடு முழுவதும் தற்போது செயலிலுள்ள பயணக் கட்டுப்பாடுகள் ஜூன் 14 ஆம் திகதி அதிகாலை 4.00 மணிக்கு நீக்கப்படும்.
Post a Comment