தென் ஆபிரிக்காவின் தங்கச்சுரங்கம் ஒன்றில் அடையாளம் தெரியாத 20 பேர்களின் உடல்களை அப்பகுதி காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர்.
தென்மேற்கு ஜோஹானஸ்பெர்கில் இருந்து 180 கிலோமீட்டர் தொலைவில் ஒர்க்கனே ரயில் பாதைக்கு அருகிலுள்ள தங்க சுரங்கத்திற்கு அருகில் கைவிடப்பட்டு அழுகிய நிலையில் கிடந்த உடல்கள் தொடர்பாக விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.
வெள்ளை பொலித்தீன் பைகளில் கட்டியபடி எரிந்த நிலையில் அவை மீட்க்கப்பட்டுள்ளன எனவும் அவை உடல்கூறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment