பயணக்கட்டுப்பாடுகளை நீக்க நாட்டின் நிலைமை சாதகமாக இல்லை என பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.
எனவே 14ஆம் திகதி பயணக் கட்டுப்பாடுகளை நீக்குவது சாத்தியமில்லை என அதன் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.
தற்போதைய சூழ்நிலையைப் பொறுத்து பயணக் கட்டுப்பாடுகளை இன்னும் இரண்டு வாரங்களுக்கு நீடிப்பது பொருத்தமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பயணக் கட்டுப்பாடுகளை மீறி ஏராளமான மக்கள் தினமும் வீடுகளை விட்டு வெளியேறுவதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என அவர் மேலும் கூறினார்.
Post a Comment