கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குறித்த புள்ளிவிபரங்களில் தவறு - இதன் காரணமாகவே போக்குவரத்து கட்டுப்பாடுகளை நீடிக்கவேண்டிய நிலையேற்பட்டது- ஜனாதிபதி - Yarl Voice கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குறித்த புள்ளிவிபரங்களில் தவறு - இதன் காரணமாகவே போக்குவரத்து கட்டுப்பாடுகளை நீடிக்கவேண்டிய நிலையேற்பட்டது- ஜனாதிபதி - Yarl Voice

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குறித்த புள்ளிவிபரங்களில் தவறு - இதன் காரணமாகவே போக்குவரத்து கட்டுப்பாடுகளை நீடிக்கவேண்டிய நிலையேற்பட்டது- ஜனாதிபதி




கொரோன வைரசினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்த தவறான புள்ளிவிபரங்கள் காரணமாகவே  போக்குவரத்து கட்டுப்பாடுகளை நீடிக்கவேண்டிய நிலையேற்பட்டது என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கொவிட் தடுப்பு செயலணியின் விசேட கூட்டத்தில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

11ம் திகதி உயிரிழப்புகள் குறித்த தவறான புள்ளிவிபரங்கள் காரணமாகவே  போக்குவரத்து கட்டுப்பாடுகளை நீடிக்கவேண்டிய நிலையேற்பட்டது என அவர் தெரிவித்துள்ளார். 

சரியான தீர்மானங்களை எடுப்பதற்கு துல்லியமான புள்ளிவிபரங்களை வழங்குவது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜூன் 11 ம் திகதி 101 உயிரிழப்புகள் நேர்ந்தன என அறிவிக்கப்பட்ட போதிலும் இது குறித்து தீவிரவிசாரணைகளை மேற்கொண்டவேளை 15 பேரே உயிரிழந்தமை தெரியவந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புள்ளிவிபரங்களை அடிப்படையாக வைத்தே 14 ம் திகதி நீக்கப்படவேண்டிய போக்குவரத்து கட்டுப்பாடுகள் 21 ம் திகதி வரை நீடிக்கப்பட்டன என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post