உருமாறிய கொரோனா வகைகளுக்கு உலக சுகாதார அமைப்பு புதிய பெயர்களை அறிவித்துள்ளது.
இதற்கமைய இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட பி.1.617.2 கொரோனா வகை 'டெல்டா' [DELTA] கொரோனா வகை என அழைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல பிரிட்டன் நாட்டில் கடந்த செப்டம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா 'அல்பா' [Alpga] என்றும் தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா 'பீற்றா' [Beta] எனவும் பிரேசிலில் கண்டறியப்பட்ட வகை 'ஹம்மா' [Gamma] எனவும் அமெரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா 'எப்சிலன்' [Epsilon] என அழைக்கப்படும்.
இந்த ஆண்டு ஜனவரியில் பிலிப்பைன்ஸ் கண்டறியப்பட்ட கொரோனா ´தீட்டா´
[TEERA] என்று பெயரிடப்பட்டுள்ளது.
Post a Comment