நாளை பயணக் கட்டுப்பாடு நீக்கப்படவுள்ள நிலையில் பொதுமக்கள் கடைப்பிடிக்கவேண்டிய நடைமுறைகள் குறித்து பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
1- அலுவலகளுக்கு சேவைக்காக குறைந்தபட்ச ஊழியர்களையே வரவழைக்க முடியும்.
2- வீட்டிலிருந்து வேலை செய்யக்கூடியவர்களை அவ்வாறே சேவையில் ஈடுபடுத்த வேண்டும்.
3- பொது போக்குவரத்தில், பயணிகளை இருக்கைகளின் எண்ணிக்கையில் மட்டுமே அழைத்துச் செல்ல வேண்டும்.
4- ஒவ்வொரு நபரும் முகக் கவசம் அணிவது கட்டாயமாகும்.
5- தனிமைப்படுத்தல் சட்டங்களை உரிய முறையில் பின்பற்ற வேண்டும்.
6- மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட மாட்டாது.
7- உல்லாசப் பயணங்கள் மற்றும் யாத்திரை செல்ல அனுமதி இல்லை.
8- பொது இடங்களில் கூட்டமாக இருக்க கூடாது.
Post a Comment