யாழில் காரைநகர் மற்றும் ஊர்காவற்துறையில் சில பகுதிகள் முடக்கம் - இராணுவத்தளபதி அறிவிப்பு - Yarl Voice யாழில் காரைநகர் மற்றும் ஊர்காவற்துறையில் சில பகுதிகள் முடக்கம் - இராணுவத்தளபதி அறிவிப்பு - Yarl Voice

யாழில் காரைநகர் மற்றும் ஊர்காவற்துறையில் சில பகுதிகள் முடக்கம் - இராணுவத்தளபதி அறிவிப்பு



உடன் அமுலுக்கு வரும் வகையில் நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டம் காரைநகரில் உள்ள கலவந்தால்வு பகுதி, ஊர்காவற்துறை பிரதேசத்தை சேர்ந்த கள்ளித் தெரு பகுதி,

கண்டி மாவட்டம் சுதுஹம்பொல பகுதியை சேர்ந்த வெலமெட வீதி

நுவரெலியா மாவட்டம் கொத்மலை, டன்சின் கிராம உத்தியோகத்தர் பிரிவை சேர்ந்த மத்திய பகுதி ஆகிய பிரதேசங்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post